வேலை நிமித்தமாக கத்தார் வந்து சிறிது காலம் ஆகின்றது, தனியாக இருக்கிறேன், குடும்பம் சென்னையில். வயதின் காரணமோ அல்லது வளர்ப்ப்பின் காரணமோ தெரியவில்லை பார்ட்டிகளுக்கு போவதிலோ அல்லது ஓயாமல் ஷாப்பிங் செய்வதிலோ எனக்கு நாட்டம் இல்லை. நண்பர் வட்டமும் இங்கு மிகவும் குறைவு. சென்னையில் இவ்வாறு தனிமை கிடைப்பது மிக மிக அரிது. அப்படி கிடைத்தால் உடனே குஷியாக ஹிக்கின்போதம், ஒடிசி அல்லது லாண்ட்மார்க் சென்று விடுவேன். பல நாட்களாக வாங்க நினைத்திருந்த புத்தகங்களை வாங்கி வருவேன். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், குளிக்காமல், சமைக்காமல், அகப்பட்டதை கொறித்துக்கொண்டு படித்துக்கொண்டே இருப்பேன். சில சமயம் பசங்களும் பெரியவர்களும் இல்லாமல் நானும் கணவரும் மட்டும் வீட்டில் இருக்கும் நாட்கள் உண்டு. அப்போதும் இப்படிதான். அவரும் பெரும்பாலும் நான் அவரை தொந்திரவு செய்யாதவரை கண்டு கொள்ள மாட்டார். தூங்காமல் நள்ளிரவில் படித்தால் மட்டும் கடிந்து கொள்வார்.
இந்த முறை திடீரென்று கிளம்பி வந்ததால் நான் புத்தகம் எதுவும் கையில் கொண்டு வரவில்லை. எப்போதும் இது போன்ற பயணங்களில் விமான நிலையத்தில் கண்டிப்பாக ஏதேனும் புத்தகம் வாங்கி விடுவேன். இந்த முறை நான் மிகவும் தாமதமாக விமான நிலையதிற்கு வந்ததால் அதற்கும் நேரமில்லை. சரி தோஹாவில் எதாவது கடையில் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் இங்கே வந்த பின் தான் தெரிந்தது அது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்று. தோஹாவில் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலுவலகத்தில் கேட்ட போது சிலர் என்னை விசித்திரமாக பார்த்தனர். வேறு சிலர் எதற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்று கேட்டனர். இன்னும் ஒருவர் இங்கு புத்தக கடையே தேவையில்லை, ஏனென்றால் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை தந்து விடுவார்கள் என்று பெருமையாக சொன்னார். அவருக்கு பள்ளி பாட புத்தகங்களை தவிர வேறு புத்தகம் இருப்பதே தெரியவில்லை, புரியவும் இல்லை. இன்னொருவர் இணைய தளத்தில் பார்த்து கொள்ளுங்களேன் என்றார்.
எனக்கு இணைய தளத்தில் படிப்பதில்அல்லது புத்தகம் தேடுவதில் ஆர்வமில்லை. ஒரு புத்தகக்கடையில் புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்து தேர்ந்து எடுக்கும் சுகம் அதில் கிடைக்குமா? அல்லது நூலகத்தில் கை நிறைய அள்ளிக்கொண்டு வரும் பூரிப்பிற்கு இணையாகுமா?
சென்னையில் தான் எவ்வளவு நூலகங்கள் - கன்னிமாரா , பிரிட்டிஷ் கௌன்சில், மட்டும் அரசு மாவட்ட நூலகங்கள்.. இன்னும் நான் கோட்டூர்புறத்தில் உள்ள புதிய பிரமாண்டமான நூலகத்திற்கு செல்லவில்லை. நான் போவதற்கு முன் அது மருத்துவமனையாக மாறி விடுமோ தெரியவில்லை ..இதை தவிர அங்கங்கே எண்ணற்ற தனியார் நூலகங்கள். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் தெருக்களில் கிடைக்கும் அந்த பழைய புத்தகங்கள், அடையாரில் இருக்கும் முருகன் லைப்ரரி... ஆஹா நினைக்கும் போதே இனிகிறதே. இப்போதுதான் தெரிகிறது சென்னையின் அருமை. ஒன்றுமே இல்லை என்றால் தெருவோரத்தில் ஏதேனும் வாராந்தரி பத்திரிக்கையாவது கிடைக்கும்.. ஆனால் இங்கு...? ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சி என்பது என்ன ? மிக உயரமான கட்டிடங்கள், அதி நவீனமான புதிய கார்கள், தங்கு தடை இல்லாத மின்சாரம், தண்ணீர், மனிதற்கு மாற்றாக கருவிகள், எதற்கு எடுத்தாலும் கணினிகள், நீண்ட அகன்ற சாலைகள், உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்கள் இவை மட்டும் தானா? மனது ஒப்புகொள்ள மறுக்கின்றது. புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு பெரிய ஊரில் ஒரு நல்ல புத்தக கடை இல்லையே என நினைக்கும் போது இங்கு இருப்பவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று வருந்துகிறேன். இங்கு வளரும் குழந்தைகள் எப்படி புத்தகம் படிப்பார்கள்? அவர்களுக்கு எப்படி அந்த பழக்கம் ஏற்படும்? புரியவில்லை.
இந்த முறை திடீரென்று கிளம்பி வந்ததால் நான் புத்தகம் எதுவும் கையில் கொண்டு வரவில்லை. எப்போதும் இது போன்ற பயணங்களில் விமான நிலையத்தில் கண்டிப்பாக ஏதேனும் புத்தகம் வாங்கி விடுவேன். இந்த முறை நான் மிகவும் தாமதமாக விமான நிலையதிற்கு வந்ததால் அதற்கும் நேரமில்லை. சரி தோஹாவில் எதாவது கடையில் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் இங்கே வந்த பின் தான் தெரிந்தது அது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்று. தோஹாவில் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று அலுவலகத்தில் கேட்ட போது சிலர் என்னை விசித்திரமாக பார்த்தனர். வேறு சிலர் எதற்கு புத்தகம் வாங்க வேண்டும் என்று கேட்டனர். இன்னும் ஒருவர் இங்கு புத்தக கடையே தேவையில்லை, ஏனென்றால் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை தந்து விடுவார்கள் என்று பெருமையாக சொன்னார். அவருக்கு பள்ளி பாட புத்தகங்களை தவிர வேறு புத்தகம் இருப்பதே தெரியவில்லை, புரியவும் இல்லை. இன்னொருவர் இணைய தளத்தில் பார்த்து கொள்ளுங்களேன் என்றார்.
எனக்கு இணைய தளத்தில் படிப்பதில்அல்லது புத்தகம் தேடுவதில் ஆர்வமில்லை. ஒரு புத்தகக்கடையில் புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்து தேர்ந்து எடுக்கும் சுகம் அதில் கிடைக்குமா? அல்லது நூலகத்தில் கை நிறைய அள்ளிக்கொண்டு வரும் பூரிப்பிற்கு இணையாகுமா?
சென்னையில் தான் எவ்வளவு நூலகங்கள் - கன்னிமாரா , பிரிட்டிஷ் கௌன்சில், மட்டும் அரசு மாவட்ட நூலகங்கள்.. இன்னும் நான் கோட்டூர்புறத்தில் உள்ள புதிய பிரமாண்டமான நூலகத்திற்கு செல்லவில்லை. நான் போவதற்கு முன் அது மருத்துவமனையாக மாறி விடுமோ தெரியவில்லை ..இதை தவிர அங்கங்கே எண்ணற்ற தனியார் நூலகங்கள். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் தெருக்களில் கிடைக்கும் அந்த பழைய புத்தகங்கள், அடையாரில் இருக்கும் முருகன் லைப்ரரி... ஆஹா நினைக்கும் போதே இனிகிறதே. இப்போதுதான் தெரிகிறது சென்னையின் அருமை. ஒன்றுமே இல்லை என்றால் தெருவோரத்தில் ஏதேனும் வாராந்தரி பத்திரிக்கையாவது கிடைக்கும்.. ஆனால் இங்கு...? ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சி என்பது என்ன ? மிக உயரமான கட்டிடங்கள், அதி நவீனமான புதிய கார்கள், தங்கு தடை இல்லாத மின்சாரம், தண்ணீர், மனிதற்கு மாற்றாக கருவிகள், எதற்கு எடுத்தாலும் கணினிகள், நீண்ட அகன்ற சாலைகள், உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்கள் இவை மட்டும் தானா? மனது ஒப்புகொள்ள மறுக்கின்றது. புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு பெரிய ஊரில் ஒரு நல்ல புத்தக கடை இல்லையே என நினைக்கும் போது இங்கு இருப்பவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்று வருந்துகிறேன். இங்கு வளரும் குழந்தைகள் எப்படி புத்தகம் படிப்பார்கள்? அவர்களுக்கு எப்படி அந்த பழக்கம் ஏற்படும்? புரியவில்லை.
மாலை அலுவல் முடிந்து வீடு வரும் போது ஏகப்பட்ட பத்திரிகைகளுடன் வருவார். எல்லா வயதினர்க்கும் ஏற்ற வகையில் அதில் புத்தகங்கள் இருக்கும். அம்புலி மாமா, பாலமித்ரா, அமர்சித்ர கதை, குமுதம், விகடன், கல்கண்டு, கல்கி, சாவி, அமுதசுரபி, இதயம் பேசுகிறது, மங்கை, கதிர், ராணி, தேவி, காமிக்ஸ், மற்றும் பல ஆங்கில பத்திரிகைகளும் அடங்கும். என் தந்தை நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சாதாரண வேலையில் தான் இருந்தார். ஆனாலும் புத்தகங்களுக்கு வீட்டில் வஞ்சனையே கிடையாது. சிறு வயதில் அதன் அருமை தெரியவில்லை இருந்தாலும் இப்போது நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது, அவருடைய சொற்ப சம்பளத்தில் அவர் புத்தகங்களுக்கு எவ்வளவு மதிப்பளித்தார் என்பது இப்போது தான் புரிகின்றது
தினசரி, வார மற்றும் மாதந்திர பத்திரிகைகள் வாங்குவது மட்டும் அல்லாது அருகில் உள்ள நூல் நிலையத்தையும் அவர் விட்டதில்லை. வாரம் ஒருமுறை சென்று ஆங்கில புத்தகங்கள் மற்றும் தமிழ் புத்தகங்கள் எடுத்துவருவார். வீட்டில் எல்லாரையும் கேட்பார் அவரவர்க்கு ஏதேனும் புத்தகம் தேவையா என்று. சில நேரம் பாட சம்பதமாக புத்தகம் தேவையாக இருந்தாலும் எடுத்துவருவார். அவர் அவருடைய நண்பர்களும் சொல்லி வைத்து கொண்டு சில ஆங்கில நாவல்களை தேடி தேடி படிப்பார்கள். பின்னர் இரவு நேரத்தில் எங்கள் வீடு வாசலில் கூடி கூடி விவாதிப்பார்கள்.
அவர் நூலகம் செல்லும் போது அம்மா அவருடன் யாரையாவது கண்டிப்பாக அனுப்பி வைப்பார். இல்லை என்றால் அவர் நூலகம் மூடும் வரை வீடு திரும்ப மாட்டார். தன்னை மறந்து படித்து கொண்டிருப்பார். அதனால் ஒருவர் அவருடன் கூடவே போய், அவரை சரியான நேரத்தில் நினைவுபடுத்தி வீட்டிற்கு கூட்டி வர வேண்டும். பெரும்பாலும் அது நானாகத்தான் இருப்பேன். ஏனென்றால் நான் வீட்டிற்கு கடைசி, மேலும் என்னை மேய்ப்பது அம்மாவுக்கு கஷ்டம். இப்படியாக ஆரம்பித்தது புத்தகங்களுடனான என்னுடைய உறவு.
நெய்வேலியில் பத்தாம் ப்ளோக்கில் இருந்தது அந்த பெரிய நூலகம். அதுவும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினுடயதுதான். எங்கள் வீட்டின் அருகில் தான் இருந்தது. சிறுவர்களுக்கான ஒரு பகுதியும் அதில் உண்டு. அப்பா என்னை கொண்டு அந்த பகுதியில் விட்டு விடுவார். நான் முதலில் படிக்கச் தொடங்கியது "டின் டின்" காமிக்ஸ் தான். இப்போது கூட அந்த வால் பையனும், துரு துரு வென்ற நாய்குட்டியும், என்னால் மறக்க முடியவில்லை. அப்புறம் இரும்புக்கை மாயாவி, Phantom போன்ற கதைகளும் என்னை வெகுவாக கவர்த்திருந்தன. பின்னர் நாலாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு போகும் வயதில் நான்சி துருவ், ஹார்டி பாய்ஸ், எனிட் ப்ளிட்டன் போன்ற கதைகள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். இது தவிர தமிழில் வரும் அம்புலி மாமா, பாலமித்ரா, சமபக் போன்ற வற்றையும் விட்டு வைத்ததில்லை. அவையெல்லாம் இப்போது வெளி வருவதில்லை என்று நினைக்கிறேன். வருத்தமாக இருக்கிறது.
நான் படித்த பள்ளியில் பெரிய நூலகம் இருந்தது. ஆங்கில பள்ளி ஆதலால் பெரும்பான்யமான புத்தகங்கள் ஆங்கிலமாகவே இருக்கும். எல்லா வகையான புத்தகங்களும் இருக்கும். தமிழ் ஆசிரியாரின் சிபாரிசின் படி சில நல்ல தமிழ் நூல்களும் இருக்கும். ஆறாம் வகுப்பு முதல் பள்ளி நூலகத்திலும் அனுமதி உண்டு. அந்த வயதில் நான் மு வரதராசன், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் எழுத்துகளை படித்தேன் என்றால் என்னாலேயே இப்போது நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் என தமிழாசிரியர் நடராஜன் தான். நடராசன் என்று சொல்ல வேண்டும், இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும். ஒவ்வொரு வாரம் சில குறிப்பிட்ட புத்தகங்களை படிக்க சொல்லுவார். படித்து விட்டு அதிலிருந்து வீட்டு பாடம் எழுதி வர வேண்டிய வேலையும் கொடுப்பார். இராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகன் , மற்றும் மகாபாரதம் , பாரதியின் பாஞ்சாலி சபதம், இப்படி எத்தனையோ புத்தகங்கள் அவற்றின் அருமை பெருமை புரியாமலே படித்தேன்.
ஆங்கிலத்தில் Tale of two cities , Prisioner of zenda, , Adventures of Tom Sawyer , David copperfield , Three Musketters என்று முதலில் ஆரம்பித்தது. பின்னர் பருவ கோளாறில் mills and boon நாவல்களில் வந்து நின்றது. ஒரு கட்டத்தில் காதல் கதைகளை திகட்ட திகட்ட படித்தேன். பின்பு அப்பாவின் உந்துதல் பேரில் James Hardly Chase , Agatha Christie ஆகியோரது நாவல் கள் படிக்க ஆரம்பித்தேன் . கூடவே தமிழில் சுஜாதா, மதன், ஜானகி ராமன், அகிலன், லக்ஷமி, சிவசங்கரி, கல்கி ஆகியோரும் எனக்குள் வளர்ந்தார்கள்.. இதில் சிவசங்கரியின் நண்டு, பாலங்கள் ஆகிய கதைகள் மனதில் இருந்து இன்னும் அகலாதவை. பிறகு கல்லூரி நாட்களில் Irwin Wallace , Robert Cook , Jeffery Archer என்று வளர்ந்தது. பிறகு வேலைக்கு சென்ற போது சுய முன்னேற்ற புத்தகங்கள் பக்கம் கவனம் திரும்பியது. அப்புறம் நிறைய சுயசரிதைகள். இன்று Ken Follet இன் "Fall of the giants " இல் வந்து நிற்கிறேன்.
இப்போது கதைகளில் நாட்டம் குறைந்து விட்டது, வரலாறு மற்றும் ஆய்வு கட்டுரைகள் மிகவும் பிடிக்கின்றன. அதே நேரத்தில் சிறு வயதில் படித்த புத்தகங்களை இப்போது படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மீண்டும் படித்தேன், மலைத்தேன்; எவ்வளவு வரலாற்று சமாசாரம் இருக்கிறது. மீண்டும் எல்லா பாகங்களையும் படிக்கச் வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால் இன்றைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்போதும் இணையத்தளம் மற்று கைபேசி துணையுடனே இருக்கிறார்கள். என் பிள்ளைகளை புத்தகம் படிக்க பழகுவதற்கு படாத பாடு பட்டேன். தினமும் இரவில் கையில் ஒரு புத்தகத்தோடுதான் படுக்க வைப்பேன். தூங்குவதற்கு முன் கண்டிப்பாக எதையாவது படிக்க வேண்டும். காலையில் தினசரியை கண்டிப்பாக படிக்க வேண்டும். வாரம் ஒரு முறை நூல் நிலையம் அழைத்து செல்வேன். எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஏதாவது படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன். ஆனால் நான் நிறைய முயற்சி செய்தும் என் மகளை என்னால் புத்தகங்கள் படிக்க வைக்கவே முடியவில்லை. அவளை தொலைக்காட்சி மற்றும் கைபேசிடம் இருந்து மீட்க முடியவில்லை. நிறைய கோவப்பட்டு பின்னர் விட்டு விட்டேன். ஆனால் என் மகனிடம் வெற்றி கண்டு விட்டேன் என்றே சொல்ல வேண்டும். அவன் நிறைய புத்தகங்கள் படிக்கிறான் என்பதை விட பல தரப்பட்ட நூல்களை படிக்கிறான் என்பதே எனக்கு மன திருப்தியை தருகின்றது. நான் இங்கே புத்தகங்கள் கிடைக்காமல் வருத்த படுவதை கேள்விப்பட்டு அடுத்த வாரத்தில் நண்பர் மூலமாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான். நானும் காத்திருக்கிறேன்.